ரூ.43 கோடி மதிப்பீட்டில் தரமற்ற சாலை !

விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையின் கரைப்பகுதியில் தார் சாலை போடுவதற்காக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் அணையின் கரைப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள், சாலையின் தரத்தை ஆய்வு செய்த போது, அப்பளம் போல் தார் சாலையை கைகளாலேயே பெயர்த்து எடுத்தனர். விடியா அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழைய தார்சாலையை அகற்றாமல் அதன் மேலேயே புதிய தார்சாலையை அமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Exit mobile version