8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

மதுராந்தகம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயதுக்காரர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிறுபேர்பாண்டி கிராமம்.இவ்வூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் வேலை செய்யும் நாகதாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகதாசை கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட நாகதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version