செந்தில் பாலாஜி பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் : முதலமைச்சர் கடும் விமர்சனம்

செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கொள்கை பிடிப்பில்லாத அவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விலகி, அதிமுகவில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை வரவேற்று பேசிய முதலமைச்சர், 1974ல் தான் கட்சியில் இணைந்ததாகவும், கட்சிக்கு உண்மையாக பாடுபட்டதால் இந்த விலாசம் கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

தொண்டர்கள் ஆளக்கூடிய அதிமுகவில், உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கொள்கை பிடிப்பில்லாத அவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version