தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு

 

சென்னை சேப்பாக்கத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேரை தகுதி செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகரின் நடவடிக்கை சரியானது தான் என்று கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை விடுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் அறைகளும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சபாநாயகரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இனி இந்த அறை சட்டப்பேரவை செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் அனுமதியின்று யாரும் திறக்க கூடாது என்றும் விடுதி அறைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 

Exit mobile version