அனுமதியின்றி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சீல்

சென்னை ஆவடியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகரில் கார்த்திகேயன் என்பவர் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வந்தார். இறுதிகட்டத்தை எட்டிய இந்த கட்டிடங்களை கட்ட நகராட்சி அலுவலகத்தில் அவர் உரிய அனுமதியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கட்டிட பணிகளை நிறுத்த கடந்த பிப்ரவரி 14ம் தேதி நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். கட்டிடத்திற்கு சீல் வைக்க மார்ச் 23ல் நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Exit mobile version