ஏகே 47 ரக துப்பாக்கி குண்டு துளைக்காத பாதுகாப்பு ஆடை- ஆவடி தொழிற்சாலை சாதனை

ஆவடியில் இயங்கி வரும் ராணுவ தொழிற்சாலையில் முப்படைகளுக்கும் பாதுகாப்பு ஆடைகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டு தோறும் பாதுகாப்பு உடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில், ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகள் துளைக்காத அதிநவீன பாதுகாப்பு உடை தயாரித்து 41 தொழிற்சாலைகளில் முதன்மை தொழிற்சாலையாக ஆவடியில் இயங்கி வரும் படை உடை தொழிற்சாலை சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழக காவல்துறையின் கோரிக்கையை ஏற்று 92 அதிநவீன குண்டு துளைக்காத பாதுகாப்பு ஆடை தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version