விதிமுறைகளை மீறி கட்டிய 43 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் விதிமுறையை மீறிய 38 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தற்போது 5 கட்டிடங்கள் சேர்த்து 43 கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஆணை வழங்கியது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாஸ்டர் பிளானை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மனு அளித்திருந்த நிலையில், மாஸ்டர் பிளான் அமலாகும் வரை சீல் வைக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் 4 குழுக்களாக பிரிந்து அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

Exit mobile version