கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர்.

கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேதுபதி. இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர், அளித்த தகவலில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பேரலில், சேதுபதியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சேதுபதியின், மனைவி பிரியாவிடம் விசாரணை நடத்திய போலீஸார், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததை கண்டறிந்தனர்.

பிரியாவுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை கண்டித்த சேதுபதியை இருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்து உடலை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்துள்ளனர்.

அதனை அப்புறப்படுத்தும் முயற்சியின்போது துர்நாற்றம் வீசி சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version