அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டம்

அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வான் பாதுகாப்பு பிரிவிற்காக ரஷ்யா சக்தி வாய்ந்த எஸ்-400 என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஏவுகணைகள் தயாரிப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும், கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவின், சுகோய்-30 ரக போர் விமானங்களையும், டி-90 ரக பீரங்கி டாங்குகளையும் உள்நாட்டில் தயாரிக்க இந்தியா உரிமம் பெற்றுள்ள நிலையில், தற்போது எஸ்-400 அதிநவீன ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தயாரிக்கப்படும் முன்பே ஏவுகணையை வாங்க துருக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version