ஓடும் ரயிலில் பயணியிடம் 10 லட்சம் ரூபாய் கொள்ளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் 10லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. ரயிலில் பெரியசாமி என்ற பயணி 10 லட்சம் ரூபாய் பணத்துடன் பயணம் செய்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரிடம் இருந்த சூட்கேசை திருடி அதில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, சூட்கேசை, பச்ச குப்பம் ரயில்வே தண்டவாளம் அருகே வீசி சென்றுள்ளனர். சென்னை சென்ற பெரியசாமி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version