மண்ணுளிப்பாம்பு தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி

கரூர் அருகே 10 லட்ச ரூபாய்க்கு மண்ணுளிப்பாம்பு தருவதாக மோசடி செய்தவரை துப்பாக்கியால் சுட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்

கரூர் மாவட்டம் வில்லுகாரன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் கோவையை சேர்ந்த நிதிஷ் என்பவரிடம் மண்ணுளிப்பாம்பு தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.ஆனால் சொன்னபடி மண்ணுளிப்பாம்பை கொடுக்காததால் ராஜாவின் நண்பர் தங்கவேல் என்பவரிடம் பணாத்தை கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல், பணத்தை ராஜாவிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகறாரில் நிதிஷின் நண்பர் முகமது ரபி என்பவர் துபாக்கியால் தங்கவேலை தோள்பட்டையில் சுட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது ரபி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.இச்சம்பவத்தில் காயமடைந்த தங்கவேலு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Exit mobile version