தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.20 லட்சம் திருட்டு

சென்னையில் தனியார் நிறுவனத்தில் மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயை திருடிச்சென்றுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் சின்டெக்ஸ் டேங்க் விற்பனை நிறுவனம் நடத்தி வருபவர் விஜயன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்ற பணம் 20 லட்சத்தை அலுவலக லாக்கரில் பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது அலுவலகத்திற்குள் புகுந்த, மர்ம நபர்கள் மேஜை லாக்கர் பூட்டினை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர். இது குறித்து அரும்பாக்கம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version