டாஸ்மாக் ஊழியரை கொலை செய்து ரூ.1.83 லட்சம் பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் ஊழியரை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

குருபரப்பள்ளி அடுத்த ஆவல்நத்தம் கூட்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இரவு டாஸ்மாக் ஊழியரை கொலை செய்துவிட்டு கடையில் இருந்த 1 லட்சத்து 83 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்துவிட்டு பணத்தை திருடியதாக நெல்லூரை சேர்ந்த அரவிந்த என்பவர் கைது செய்யப்பட்டார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வனப்பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்று பணத்தை கைப்பற்றினர்.

Exit mobile version