நண்பரின் அக்கா மீது FEEL ஆன ஃபிரண்டு ; காட்டிற்குள் வைத்து கதையை முடித்த நண்பர்கள்

நண்பனின் சகோதரி உடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த ரவுடியை சக நண்பர்களே தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த கலுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்,

கர்நாடகாவில் தங்கியிருந்து ஆள்கடத்தல், வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை செய்து வந்த இவர்,

கர்நாடக மாநில காவல்துறையால் கட்டம் கட்டப்பட்டதால், வேறு வழியின்றி சொந்த ஊரிலேயே தஞ்சம் அடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஊரில் சிறுவயது நண்பர்களான சந்தீப், சேத்தான், மணி ஆகியோருடன் நெருங்கி பழகிய மஞ்சு, நண்பனின் நண்பன் என்ற போர்வையில் சந்தீப்பின் சகோதரியுடன் அதீத நெருக்கம் காட்டியுள்ளார்.

இதனை அறிந்த நண்பர்கள், மஞ்சு நாத்தை கண்டித்துள்ளனர்.

ஆனால் நண்பர்களின் பேச்சை மருந்திற்கு கூட மதிக்காத மஞ்சு, தாகாத உறவை தயக்கமின்றி தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மஞ்சுவை அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி தடவிய கத்தியை அவரது அடிவயிற்றில் ஆழமாக குத்தி எடுத்தனர்.

இதில் வலி, எரிச்சல் தாங்க முடியாத மஞ்சு மண்ணில் விழுந்து துடிதுடித்து அலற, கல்லைப் போட்டு அவர் தலையை சிதறடித்தனர்.

பின்னர் திட்டமிட்டபடி உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு அருகில் உள்ள புதைகுழியில் போட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கணவனை காணவில்லை என மஞ்சு நாத்தின் மனைவி அளித்த புகாரில் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தீப் அவரது நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் மூவரும் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதையடுத்து அழுகிய நிலையில் மஞ்சுவின் உடல் தோண்டி எடுக்க பட்டது.

பின் அவரது உடல் உடற்கூராய்விற்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Exit mobile version