டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் உடனான 2-வது இருபது ஓவர் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 104 சிக்சகளுடன் 2-வது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா இப்போட்டியில் 3 சிக்சர்கள் விளாசினார். இதன்மூலம் 105 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ள ரோஹித் 107 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அதேபோல், முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா, தவான் இணை 10-வது முறையாக 50 ரன்கள் சேர்த்துள்ளனர். இதன்மூலம் அதிக முறை 50 ரன்கள் சேர்த்த ஜோடிகளின் பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளனர். நியூஸிலாந்தின் மார்டின் கப்தில், வில்லியம்சன் இணை 11 முறை 50 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

Exit mobile version