ஆஸி.வுக்கு எதிரான கடைசி டி20 போட்டி – தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி

 

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

மெல்போர்னில் நடந்த இரண்டாவது 20 ஓவர் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா 20 ஓவர் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று நடைபெற உள்ளது. தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்திய அணி களம் இறங்க உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version