முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை நடக்கிறது.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 இருபது ஓவர் மற்றும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், முதலாவது இருபது ஓவர் போட்டி விசாகப்பட்டிணத்தில் நாளை நடைபெறுகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரின் போது ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1 க்கு 1 என சமன் செய்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version