தேனி அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தேனி அருகே, தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 280 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 280 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோகுலகிருஷ்ணின் உறவினர்கள், அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version