திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜ் நகரில் வசித்து வரும் பிலவேந்திரன் என்பவரது வீட்டிற்குள் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது.

அப்போது, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டதும், பிலவேந்திரனை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன், கத்தி மற்றும் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.

அவரது மகன் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு, பதிவு எண் இல்லாத வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக கன்னிகாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் ஞானசேகரன் என்பவரது வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்தனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால், கொள்ளை கும்பல், தாங்கள் வந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. கொள்ளையர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version