ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உபயதுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியுடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version