வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் கொள்ளை

தெலங்கானாவில் வங்கி ஊழியரின் கவனத்தை திசை திருப்பி தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தின் இருந்த பணத்தை திருடி சென்று தப்பியோடிய கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வங்கி வாகனத்தில் பணம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வங்கி ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில் முனைப்பாக இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பினர்.

அப்போது மற்றொருவர் வாகனத்தின் எதிர்புறமுள்ள கதவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் கொண்ட பணப் பெட்டியை எடுத்து கொண்டு ஷேர் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version