கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை

சேலம் அருகே, தொழிலதிபரை கட்டிப்போட்டு, 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கடையில் வேலைபார்த்த ஊழியர் உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில், வீட்டிற்கு தேவையான பொருட்களை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருபவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமார்.

இவரது கடையில், அதே மாநிலத்தை சேர்ந்த ஒம் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வந்தார்.

ஊரடங்கு காலமென்பதால், கடையில் வசூல் செய்த பணத்தை கடைக்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கடையில் வேலை பார்த்த ஒம்பிரகாஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடை உரிமையாளரான மோகன் குமாரை கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 40 லட்சம் ரூபாய், வீட்டில் இருந்த 10 லட்சம் என, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Exit mobile version