அவருடன் பணியாற்றுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்: ரிக்கி பாண்டிங்

ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்துடன் பணியாற்றுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகவும், போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வல்லமை பெற்றவராக கருதப்பட்டவர் இளம் வீரரான ரிஷப் பந்த். போட்டியின் முதல் பந்திலேயே தனது வேகத்தை காட்டி, விரைவிலேயே ஆட்டமிழப்பதால் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது எழுந்தது. இருந்தாலும், தேர்வுக்குழுவினர் அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

தற்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்திருந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பணியிலும், பேட்டிங்கிலும் ஜொலித்தி வருகிறார்.

இந்நிலையில், ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகரான ரிக்கி பாண்டிங் கூறுகையில், ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பந்துடன் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஒரு இளம் வீரர். அதிகளவிலான திறமையை பெற்றுள்ளார். ரிஷப் பந்த் விரைவிலேயே, இந்திய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனில் மீண்டும் இடம் பிடிப்பார் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

Exit mobile version