இடைத்தேர்தல் முடிவுகள் திமுகாவுக்கு முடிவுரையாக இருக்கும்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதயபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நன்மைபயக்கும் எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொடுக்கவில்லை என்றும், தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விலங்கி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார். போலி வாக்காளர் அட்டையை தயாரித்து அதன் மூலம் பூத்தை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version