பட்டுக்கோட்டையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்

பட்டுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கஜா புயலால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் ஏராளமான மரங்கள் சாலைகளில் சாயந்தன. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின்சாரத்துறை, சுகாதாரத்துறை மற்றும்
பொதுப்பணித்துறைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு முறையாக உணவு, குடிநீர், உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version