மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நொய்யல் ஆறு, மேட்டுப்பாளையம் பகுதி பவானி ஆற்றுப் பகுதியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version