காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழி தவறி வந்த சிறுவன் மீட்பு

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழி தவறி வந்த சிறுவனை, மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு வழிமாறி வந்த சிறுவன் ரயில் நிலையத்திலேயே சுற்றித் திரிந்துள்ளான். இதைக்கண்ட காவல்துறையினர் சிறுவனை மீட்டதுடன், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் ரயில் நிலையம் வந்த பெற்றோரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுவனை ஒப்படைத்தனர். ரயில்வே காவல்துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version