இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களை மீட்க கோரிக்கை

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். கடந்த ஜூலை 27ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் 7 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். மீண்டும் நாளை தலைமன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version