ஐபிஎல் கிரிக்கெட்: முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களுரூ அணி

ஐபிஎல் போட்டியில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களுரூ அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 99 ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட், மொயின் அலி மற்றும் முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 19 புள்ளி 2 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

இந்த வெற்றி மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய விராட்கோலி 67 ரன்களும், டிவில்லியர்ஸ் 59 ரன்களும் எடுத்தனர். 

Exit mobile version