சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து ரஞ்சன் கோகாய் விலகல்

புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிகாலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 3-வது உறுப்பினரான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு பதிலாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியை கூட்டத்தில் பங்கேற்குமாறு பரிந்துரைத்துள்ளார்.

ஆலோக் வர்மாவை நீக்கப்பட்ட வழக்கை பரிசீலித்து, தீர்பளித்த காரணத்தினால், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version