குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வந்தார்

ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு குடியரசு தலைவர் சென்றார்.

அங்கு முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க உள்ளார். நாளை காலை 8 மணிக்கு சூலூர் விமான தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடியரசு தலைவர், மாலை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். ராம்நாத் கோவிந்தின் வருகையை ஒட்டி கோவை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version