ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை காலை சுமார் ஆயிரத்து 720 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்திய இலங்கை கடற்படையினர், படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு வேறு பகுதிக்குச் மீனவர்கள் சென்றுள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த சுவிட்டர் என்பவரது படகு பழுதானது. இந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகிலிருந்த 11 மீன்வர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்தனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version