ராஜீவ் காந்தி கொலை கைதி பிரதமர் மோடிக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுவிக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மூலமாக அனுப்பப்பட்ட கடிதத்தில், காலிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தது போல், தங்களையும் விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் சம்மதம் தெரிவிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version