விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திரபாலாஜி நியமனம் – அதிமுக தலைமை கழகம்!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நியமனம் செய்து அஇஅதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சிப் பணிகளைக் கவனிக்க, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ள

Exit mobile version