திருப்பத்தூரில் பெய்த கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூரில் பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக வந்து மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version