ராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை: அம்பிகா சோனி

 

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின் வெளியில் வந்த மூத்த காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனியிடம், தேர்தலை கையாண்ட ராகுலின் தலைமைப் பண்பு குறித்து எதுவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்களா என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அம்பிகா சோனி, அவ்வாறு எந்தவொரு கேள்வியையும் நாங்கள் எழுப்பவில்லை என்றார்.

தேர்தல் தோல்வி குறித்தும், தலைமைப் பண்பில் சரிசெய்ய வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் விவாதிக்காமல், சம்பிரதாய நிகழ்வாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version