காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராகுலை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்பதை வலியுறுத்தும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அவரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காரிய கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் அறிவித்தார். பதவி விலகக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளா ர்.இதனிடையே ராகுல் ராஜினாமா செய்யக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்களும், கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும், ராகுலை இன்று சந்தித்து பேச உள்ளனர். தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version