ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்? ஏன்?

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

மக்களவைத் தேர்தலின்போது கடந்த ஏப்ரல் 13, 2019 அன்று கர்நாடகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘நீரவ் மோடி, லலித் மோடி. என திருடர்கள் அனைவரும் எப்படி மோடி என்பதை பொதுவான குடும்பப் பெயராக கொண்டிருக்கின்றனர்’ என்று பேசியது சர்ச்சையானது. 

இந்த வழக்குக்காகவே இன்று நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார் . 

Exit mobile version