மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம்- பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குருகிராமில் முகாம்

 மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென கட்சியில் இருந்து விலகினார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு போபாலில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், டெல்லி சென்றடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஹரியானா மாநிலம் குருகிராமில் தங்கியுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Exit mobile version