நடிகை ரைசா வில்சனுக்கு மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ்

சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன், 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலிடம், நடிகை ரைசா வில்சன் அண்மையில் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தார்.

தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, மருத்துவர் பைரவி செந்திலுக்கு ரைசா, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

ரைசாவுக்கு ஏற்பட்டது பாதிப்பு, இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்றுதான் என மருத்துவர் பைரவி செந்தில் கூறியுள்ளார்.

தனது நற்பெயரை கெடுக்கும் விதமாக ரைசா நாடகமாடுவதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version