ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி

ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு முதல் தவணையாக 284 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த தொகை நஷ்டத்தில் இயங்க கூடிய அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என கூறிய ராகுல் காந்தி, அதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version