தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – ராகுல் காந்தி

தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

விகாராபாத் மாவட்டம் கோடங்கல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டிசம்பர் 7-ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் டிஆர்எஸ் அரசாங்கத்தை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவ்வாறு ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதங்களில், 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய ராகுல் காந்தி, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர் பென்சன் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version