புதுச்சேரியில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும்-தேர்தல் அலுவலர்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 விவிபேட் எந்திரங்களின் வாக்குகளை சரிபார்க்க வேண்டியிருப்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில்தேர்தல் அலுவலர் அருண், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 23ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் வரும் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளிலும் மாலை 4 மணி வரை மது பானக்கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்

Exit mobile version