புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திவந்த இருவர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராஜேஷிடம் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் 12 வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Exit mobile version