புதுச்சேரி முதல்வருக்கு பொதுச்செயலாளர் நன்றி..!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளினால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர் பலர் அவருக்கு தங்களது வாழ்த்தினைத் தெரிவித்தனர். அதேபோல புதுச்சேரியின் முதலமைச்சரும் என்.ஆர் காங்கிரசின் தலைவருமான திரு. ந. ரெங்கசாமி அவர்கள்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை செல்பேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார். வாழ்த்திய அவருக்கு பொதுச்செயலாளர் அவர்கள் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version