இன்று முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் !

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கழக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று முதல் வருகிற 17 ஆம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு வீரப்பன் சத்திரம் பகுதி மற்றும் பெரியார் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால் ரோடு, இடையன்காட்டுவலசு, மணிக்கூண்டு மற்றும் வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் சிறப்புரை ஆற்றுகிறார். இதேபோல் 24 ஆம் தேதியும் கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு உள்ளிட்ட 19 இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் அவர், இறுதியாக பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உரையாற்ற உள்ளார்.

Exit mobile version