பூங்கா, உடற்பயிற்சிமையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் அரசுக்குக் கோரிக்கை

தேவிபட்டினத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஊராட்சியில் கடற்கரை அருகே சுமார் 32 லட்சம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சிகருவிகளுடன் கூடிய பூங்கா ஒன்று கட்டப்பட்டுள்ளது. கட்டி முடித்து சுமார் 1 ஆண்டுகளுக்கும் மேலாகியும், மக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, அப்பகுதி மக்களும் இளைஞர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version