காயமடைந்த பெண்ணை மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே, விபத்தில் காயமடைந்த பெண்ணை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தில், அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.. மாதவரம் துணை ஆணையர் ரவாலி பிரியா தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக விபத்துக்குள்ளான பெண்ணையும், இருசக்கர வாகனத்தில் வந்த நபரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Exit mobile version