விசிக வழக்கறிஞர், காவல்துறையினருடன் வாக்குவாதம்

சென்னை வால்டாக்ஸ் சாலையில் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய விசிக வழக்கறிஞர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடிக்க பாய்ந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வால்டாக்ஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விசிகவைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற வழக்கறிஞர், மதுபோதையில் தனது காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தகாத வார்த்தைகளால் திட்டியபடி, காவல்துறையினரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version