நகை கடை சோதனை செய்வது போல 5 லட்ச ரூபாய் திருடிய காவலர்கள்

சென்னையில் நகைக்கடையில் சோதனை செய்வது போல சென்று, 5 லட்ச ரூபாயை திருடிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஆர்த்தி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கட்டுக்கட்டாக பணம் எண்ணப்படுவதாக, கடந்த 26ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவலர்கள் ஷாஜின், முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் கடையை சோதனை செய்ய சென்றனர்.

அப்போது பணக்கட்டுகளை டேபிள் மீது வைத்து விசாரித்துவாறே, 4 கட்டுகளை எடுத்து பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டனர். இதையடுத்து கடை உரிமையாளர், 5 லட்ச ரூபாயை இருவரும் திருடிவிட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து, 2 காவலர்களும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து வடக்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version